அன்போடும் பக்தியோடும் வணங்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி, சாதாரண மக்களுக்கு நெருக்கமானவராக வாழ்ந்தார் என்பதை எடுத்துரைக்கும் நுால்.
காஞ்சிப் பெரியவரின் கருணைக்கடலில் பிறந்த முத்துக்கள் பல இந்த நுாலில் உள்ளன.
கலை என்பது நம் உழைப்பால் மட்டும் வருவதில்லை. சகலகலாவல்லியான அம்பிகையின் கருணையும், கடாட்சமும் அதற்கு வேண்டியிருக்கிறது. அன்பு பீறிட்டு கிளம்பும்போது மூளையால் நியாய, அநியாயத்தை சிந்திக்க முடியாது. இதையெல்லாம் படிக்கும்போது காஞ்சிப் பெரியவர் முற்றும் துறந்த முனிவர் அல்ல; முற்றும் அறிந்த ஞானி என்றே சொல்லத் தோன்றுகிறது.
– இளங்கோவன்