கிணறு

விலைரூ.180

ஆசிரியர் : அப்சல்

வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சிறுகதைகளின் தொகுப்பு நுால். சொந்த வீடு கனவை, ‘ஏப்-1’ கதை வலியுடன் பேசுகிறது.

தினமும் கதை சொல்லி துாங்க வைக்கிறார் தந்தை. ஒரு நாள், ‘ஏம்பா அம்மா கதையை மட்டும் சொல்ல மாட்டீங்களா...’ என கேட்க, எய்ட்ஸ் பாதித்து இறந்த மனைவி பற்றி, ‘வாடகை உறவுகள்’ கதை கூறுகிறது.

வெளியூர் மக்களுக்கு கனவில் வரும் கிணறு, கிராம மக்கள் கனவில் வராததை சுவாரசியத்துடன், ‘கிணறு’ கதை சொல்கிறது. சிறையில் ரகு, பத்மினி சந்திப்பு சகோதர பாசத்தில் துவங்கி, ரகுவின் துாக்கு தண்டனைக்கு, பத்மினியின் சகோதரர் மரணம் தான் காரணம் என தெரிய வரும், ‘கயிறு’ கதை திருப்பங்களை கூறுகிறது.

நாட்டு நடப்புகளை மையப்படுத்திய படைப்பு நுால்.

– டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us