உயர... உயர...

விலைரூ.175

ஆசிரியர் : சோம. வள்ளியப்பன்

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: தீபாவளி மலர்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழ்க்கையை சரியான கோணத்தில் புரிந்து செயல்வடிவம் கொடுக்க தன்னம்பிக்கை ஊட்டும் நுால். கேள்வி – பதிலாக புரிய வைக்கிறது.

நன்மையும், தீமையும் அடுத்தவரால் வருவதில்லை; துன்பமும், ஆறுதலும் மற்றவர்கள் தருவதில்லை என விவரிக்கிறது. அன்பின் மொழிக்கு எல்லை இல்லை என்கிறது. அனுசரித்து போகாதவர்களை ஒதுக்கி வைப்பது சரிதானா என, கேள்வியை எழுப்புகிறது.

ஏழை, பணக்காரர் என, தனித்தனியாக பணம் அச்சிடுவதில்லை; ஒரே பணம் தான், அது கையில் இருப்பதை பொறுத்து மதிப்பு உயர்வதை கூறுகிறது.

மகிழ்ச்சி என்ற சாவியை, எப்போதும் உடம்பில் ஒட்டி வைத்திருக்க வலியுறுத்துகிறது. விருப்பு, வெறுப்பு இல்லாமல் பாராட்டும் மனம் வேண்டும் என்கிறது.

அர்த்தத்துடன் வாழ வலியுறுத்தும் நுால்.

– டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us