முகப்பு » கவிதைகள் » தொப்புள் கொடி உறவு

தொப்புள் கொடி உறவு

விலைரூ.170

ஆசிரியர் : எம்.ஜானகிராமன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உயரிய சிந்தனைகளைத் தாங்கிய கவிதைகளின் தொகுப்பு நுால். சமுதாய நலன், பகுத்தறிவு, மானுடத்தின் அவலம், சாதி கொடுமை, சமுதாய ஏற்றத்தாழ்வுகள், அடிமைகளின் ஆதங்கம், சாமானியர்களைச் சுரண்டி உல்லாசமாக வாழும் அரசியல்வாதிகள் என பல பொருட்கள் குறித்து உள்ளது.

போலி பகுத்தறிவு பேசும் ஏமாற்றுக்காரர்கள் என இதய ரணங்கள் கவிதைகளாய் கொப்பளிக்கின்றன. ‘பாவத்தைப் பாவத்தால் தீர்த்து விட்டார், பரமன் சிரிக்கின்றான் தேரில் நின்று’ என மூட நம்பிக்கையை சாடும் வரிகள் சிறப்பு.

‘தாய் திருநாடே, உன் முகம் பார்த்து கிடக்கின்றோம்’ எனத் தேசாபிமானம் பொங்குகிறது. கவிதை வரிகளில் சொற்கட்டும் சந்தங்களும் மிளிர்கின்றன. மண்வாசனை மாறாத கவிதை நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us