இந்தியாவை வளமிக்க நாடாக்க உழைத்த தலைவர்களின் சிறப்பியல்புகளை வெளிப்படுத்தும் நுால். காந்திஜி, அம்பேத்கர் நல்லியல்புகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
மக்களின் மனதில் மறையாமல் நிற்பதற்கு உரிய செயல்களை விளக்குகிறது. காந்திஜியின் உழைப்பின் தீவிரத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. காமராஜரின் பண்பு நலன்களை பிரகடனப்படுத்துகிறது.
நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபபாய் படேல் சேவையின் சிறப்பை மனதில் பதியும் வகையில் எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு தலைவரின் செயல்பாடுகளையும் வித்தியாசமான கோணங்களில் நோக்கி, சிறப்பியல்புகளை தொகுத்து தருகிறது. தலைவர்களை மனதில் பதிக்கும் நுால்.
– மதி