சந்த நயம் மிக்க கவிதைகளால் புனையப்பட்ட காவிய நுால்.
கடல் நாட்டு மன்னன் மணிவேலன், அமைச்சர் வஞ்சகப் பேச்சால், மலைநாட்டு மன்னன் அணிவண்ணன் மீது படையெடுக்கிறான்; மணிவேலன் மகன் வேலழகன் படைத்தளபதியாக போர்க்களத்தில், மலைநாட்டு மன்னன் மகளை கண்டு காதல் கொள்கிறான்.
அமைச்சர் மகன் முடிச்செல்வன், நியாயமற்ற சமர் என்று கூறி எதிரிக்கு உளவு கூறுகிறான். அவன் பேச்சில் ஐயுற்று மலைநாட்டு மன்னன் சிறை வைக்கிறான். வேலழகன் நண்பன் மூலம், தாய் குயில்மொழிக்கு காதல் குறித்த செய்தி அனுப்புகிறான். இறுதியில் மலைநாட்டு மன்னன் துாதுவனை அனுப்பி, மணம் பேசி முடிக்கிறான். நாட்டில் ஜாதி, மதம், சமயம் இல்லா சமுதாயத்தை வேலழகன் உருவாக்கி மகிழ்வதாக முடிகிறது.
– முனைவர் கலியன் சம்பத்து