சங்க இலக்கியங்கள், பண்டைய தமிழர் வாழ்வின் வரலாற்று ஆவணங்கள்; அன்றைய அக, புற வாழ்க்கை முறைமையைக் காட்டும் காலக்கண்ணாடி. 2000 ஆண்டுகளுக்கு முன், இயற்றப்பட்ட சங்கப்பாக்களில், முதன்மை நிலையில் வைத்துப் போற்றப்படும் நுால் பத்துப்பாட்டு. இதன் மூல பிரதிகளை தேடிக்கண்டுபிடித்து, நச்சினார்க்கினியர் எழுதிய உரையுடன் பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர். ‘பத்துப்பாட்டு மூலமும் மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும்’ என்ற தலைப்புடன், ‘டாக்டர் உ.வே.சாமிநாதையர் பரிசோதித்து எழுதிய பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன்’ என்று, 1889ல் பதிப்பித்தார். இப்போது வரலாற்று சிறப்பு மிக்க, எட்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது இந்நுால். பத்துப்பாட்டில் அடங்கிய திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவற்றுடன், முதல் மூன்று பதிப்புகளில், உ.வே.சா., எழுதிய முகவுரைகளும் இடம்பெற்றுள்ளன.மலைபடுகடாம் உரையில், நச்சினார்க்கினியர் தரும் விளக்கத்தில், பத்துப்பாட்டு நுால்களைத் தொகுத்தோர் சங்கப் புலவர்களே என்று அறிய முடிகிறது.பத்துப்பாட்டு நுால்கள் தொகுக்கப்படாதிருந்தால், சங்ககால மன்னர்களின் வரலாறும், பண்டைய தமிழ் மக்களின் வாழ்க்கை முறைமையும் உலகம் அறிய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். இவற்றை பாடிய புலவர்கள் நத்தத்தனார், பெருங்கவுசிகனார், உருத்திரங்கண்ணனார், கபிலர், நப்பூதனார், நக்கீரர், மாங்குடி மருதனார், முடத்தாமக் கண்ணியார் ஆகியோராவர். பாடப்பட்டவர்கள், ஆரியவரசன் பிரகத்தன், ஓய்மானாட்டு நல்லியக்கோடன், குமரவேள், சோழன் கரிகாற்பெருவளத்தான், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன், தொண்டைமான் இளந்திரையன், நன்னன். இவர்களின் வரலாறு விரிவாகத் தரப்பட்டுள்ளது. முதற்குறிப்பகராதி, பதிப்பில் குறிப்பிடப்படும் நுால் பெயர்களை தெளிவாகப் புரிந்து கொள்ள வழிவகுக்கிறது. பிற்சேர்க்கையாகத் தரப்பட்டுள்ள அகராதி, செய்யுள்களில் வரும் பதங்களின் பொருள்களை புரிந்து கொள்ள உதவுகிறது. பத்துப்பாட்டு நுாலை அச்சேற்ற உ.வே.சா., எடுத்த முயற்சி கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டியது. நச்சினார்க்கினியரின் உரையுடன், பாடல்களின் பல்வேறு படிகளைப் பொருத்திப் படித்த பின் தான் பதிப்பித்துள்ளார். கடந்த, 1888 முதலே, மூல பிரதிகளைத் திரட்டத் துவங்கியுள்ளார். அவரது அயராத முயற்சிகள் நெகிழ்த்துகின்றன. முதல் பதிப்புடன் நிறைவு அடைந்து விடாமல், மேலும் பிரதிகளை தேடியலைந்துள்ளது, அவரது ஊக்கம் மற்றும் விடாமுயற்சியை வெளிப்படுத்துகிறது.நுாலை, உருவாக்கியது பற்றி, முகவுரைகளில் உ.வே.சா., விவரித்துள்ளார். அவரது தணியாத வேட்கையையும், பிரதிகளைத் தேடி அலைந்த கடும் உழைப்பும் இவற்றில் வெளிப்படுகிறது. இந்த நுாலை பதிப்பிக்கும் இமாலயப் பணிக்கு, திருப்பாதிரிப்புலியூர் சேஷையர் பொருளுதவி வழங்கியதை நன்றியுடன் உ.வே.சா., பதிவு செய்துள்ளார். முதல் பதிப்பு அச்சில் வெளிவர பொருளுதவிய திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர், துணை ஆட்சியர் தில்லை நாயகம் பிள்ளை, வழக்கறிஞர் சீனிவாச பிள்ளை, மிராசு ரத்தினம் பிள்ளை, ஜமீன்தார் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரை நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார். இரண்டாம் பதிப்பு வெளிவர உதவியவர்கள் தமிழ்ப் பண்டிதர்கள் இ.வை.அநந்தராமையர், ம.வே.துரைசாமி ஐயர், பொருளுதவி தந்த ராஜராஜேசுவர சேதுபதி மகாராஜா. இவர்களுக்கும் நன்றி கூறி நெகிழ்ந்துள்ளார். மூன்றாம் பதிப்பு, 1931ல் வந்தது. அந்த பதிப்பில் செய்த மாற்றங்கள், அரிய சேர்ப்புகளை தனியாக குறிப்பிட்டுள்ளார். பதிப்பு வெளிவர பொருளுதவி செய்த வைத்தியலிங்க தேசிகர், சுவாமிநாத சுவாமிகள், ஷண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி மகாராஜா, கொழும்பு ஸ்ரீகாந்த் முதலி, பெரும்பன்றியூர் பெரியசாமி முத்தையா மற்றும் அச்சிடுவதில் உதவியவர்களை நினைவுகூர்ந்துள்ளார். பத்துப்பாட்டு நுாலின், எட்டாம் பதிப்பு வெளிவர துணை நின்ற பெருமை, நாணயவியல் அறிஞரும், ‘தினமலர்’ நாளிதழ் பங்குதாரருமான, டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தியை முழுமையாக சாரும். அவர் வழங்கிய நிதியுதவியால் தான், அழகிய கட்டமைப்புடன் உருவாகி, வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. தமிழரின் பொக்கிஷமாக உள்ள இந்த நுாலை, ஒவ்வொரு தமிழார்வலரும் படிக்க வேண்டும். – மெய்ஞானி பிரபாகர்பாபு
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்
-
பாவை பப்ளிகேஷன் (பி) லிட்., 142, ஜானிஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 130. விலை: ரூ.50).மொழி பெயர்ப்பு என்பது ஒரு கலை. சிந்தனையைத் தூண்டும் கலை. எனவே, மொழி பெயர்ப்புக் கலை பற்றிய உணர்வும், ஞானமும் நமது இன்றைய தேவை. ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்கள் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ளுதலும் அவசியம். இப்புத்தகம் இந்த வகையில் பயனுள்ள பல தகவல்களை, வழிகாட்டுதல்களை நமக்குத் தெரிவிக்கிறது. ஆசிரியர் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ள பல மேற்கோள்கள், சான்றுகள் பிரமாதமாக உள்ளன. இத்துறையில் இதுவரை வந்துள்ள நூல்களின் வரிசையில் இப்புத்தகத்திற்கு தனி மரியாதையும் கவுரவமும் நிச்சயம் உண்டு.
-
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 255. விலை: ரூ.95). ஆனந்த விகடன் இதழில் வெளியான தமிழக பிரபலங்கள் பலரின் விஷய கனமிக்க பேட்டிகளின் தொகுப்பு நூல் இது. தமிழ் சமுதாய முன்னேற்றத்தில் அக்கறையுள்ள, அதற்கான ஒவ்வொரு வகையில் உழைக்கிற அறிவு சார்ந்த பெருமக்கள் பலர் கூறுகிற அரிய கருத்துக்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது "தமிழ் மண்ணே வணக்கம்! இன்றைய தலைமுறை அந்நியக் கலாசாரத்தின் தலையாட்டிப் பொம்மையாக மாறிப் போனது எதனால்? யானைக் கட்டிப் போரடித்த தமிழனின் விளை நிலங்கள் "ரியல் எஸ்டேட்'களாக மாறியதன் பின்னணி என்ன? என்பது போன்ற கனமான விஷயங்களில் நம் அறிவைத் தூண்டி, சிந்திக்க வைக்கின்றனர் ஒவ்வொருவரும். குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஜெயகாந்தன், வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், அசோகமித்திரன், தமிழருவி மணியன் போன்ற பல்துறை வித்தகர்கள் 44 பேரின் விரிவான பேட்டிகளும் அவர்களின் வண்ணப் படங்களுமாய் ஜொலிக்கிறது இந்த நூல். நல்ல முயற்சி.
-
தமிழ்மணி பதிப்பகம், 127, ஈஸ்வரன் கோவில், தெரு, புதுச்சேரி-605 001. (பக்கம்: 144. விலை: ரூ.60). ஏறக்குறைய 150 ஆண்டுகள் பிரெஞ்சு ஆட்சி நடைபெற்ற புதுச்சேரியில், தமிழின் நிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி 36 தலைப்புகளில் ஆசிரியர் படம் பிடித்து காட்டியிருக்கிறார். "சொல்லதெழுதல்' என்ற இலக்கணப் பயிற்சியை பத்தாம் வகுப்பு வரை பிரெஞ்சு அரசாங்கம் வைத்திருந்தது (பக்.135). இதனால் தமிழ் மொழியில் செம்மை தென்பட்டது' என்கிறார் ஆசிரியர்.தமிழ் வளர்ச்சிப் பணியில் தமிழர்களோடு பிரெஞ்சு அரசாங்கத்தார் ஈடுபட்டது தெரிய வருகிறது. பிரெஞ்சிந்திய தமிழ் நிலைப் பள்ளி அறிய விழைபவருக்கு இந்நூல் ஒரு விருந்து.
-
ஏழிசைச் சூழல், 62, மறைமலை அடிகள் சாலை, புதுச்சேரி-605001. (பக்கம்:181 விலை: ரூ.60.) தமிழிலக்கணம், இசைத் தமிழ் என இவ்விரண்டு புலங்களில் தேர்ச்சியும் புலமையும் பெற்ற முனைவர் இரா.திருமுருகன். 32 தலைப்புகளில் தாய் மொழி, தமிழிலக்கணம், இசைத் தமிழ், ஆட்சி மொழி என பல கட்டுரைகளை இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். பல செய்திகளை இவர் தன்னை முன்னிலைப் படுத்தி ஆய்வு நோக்கில் பதிவு செய்துள்ளதைப் பார்த்தால் இவர் ஆத்திகரா இல்லை நாத்திகரா என தடுமாற்றம் வருகிறது. "இருபத்தி ஏழாம் ஆண்டு, ஒன்றுபடுவோம் உருப்படுவோம், திருக்கோவிலில் தமிழிசைப் பாடுவதற்குத் தடை? ஆட்சி மொழியை இழிவுபடுத்தும் அரசு, என்று நம் தாய்மொழி அரியணை ஏறும்? அம்மையாரைப் பற்றிய அருவருப்பான ஆராய்ச்சி, இதுதான் கட்டாயத் தமிழா?' போன்ற பல கட்டுரைகளில் இவரது கோபமும் தமிழுக்கு கேடு நேர்ந்திடுமோ என்ற ஆதங்கமும் தெரிகிறது.
-
ஐந்திணைப் பதிப்பகம், 279 பாரதி சாலை, சென்னை-5. (பக் கம்:152 விலை: ரூ.70.) சேர நாட்டு கேரளத்து மண்ணிலிருந்து செந்தமிழை வளர்க்கும் படைப்புகளைத் தரும், எழுத்தாளர் வரிசையில், இவரது நூல் குறிப்பிடத்தக்கதாய் உள்ளது.அறிவியலில் தேசிய விருது பெற்ற ஆர்.வி.பெருமாள், ந.வேதாசலம் ஆகியோரைப் பற்றிய செய்திகள் அருமையானவை. சுவை தரும் தமிழ்க்கனி ரசக் கட்டுரைகள்!
-
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 122. விலை: ரூ.50). மேடைப் பேச்சுக் கலையை, மென்மையாய் விளக்கி, அதன் தன்மையை விவரித்து, அந்தக் கலையில் மேன்மை பெறச் செய்யும் மேடைப் பாடநூல்!பேசுவது முன்பாக தயாரிப்பது எப்படி? திட்டமிடுவது எப்படி? துணிவை வரவழைப்பது எப்படி? காலக்கட்டுக்குள் அருவி போல் கொட்டி, அனைவரையும் நிமிர வைப்பது எப்படி? என்று 15 தலைப்புகளில் விளக்கியுள்ளார்."ழ' "ல' "ள' ஆகிய ஒலி உச்சரிப்புகள் இன்றைய சில பேச்சாளருக்கு சரியாக இல்லாததை சரியாகக் குறிப்பிட்டு அதைத் திருத்த வழிகாட்டியுள்ளார்.இவரது சில மேடை அனுபவங்களும், மேற்கோள் சினிமா பாடல்களும், சில இடங்களில் மணி அடித்த பிறகும் பேசும் பட்டிமன்றப் பேச்சுப் போல "மிகை'யாக உள்ளது. சிறந்த பேச்சாளர்களின் பட்டியலில் இன்று கொடி கட்டிப் பறக்கும் பேச்சாளர் சு.கி.சிவம் போன்றவர்கள் விடுபட்டுள்ளனர். மேடைத் தமிழ்ப் பயணத்துக்கான கால அட்டவணை நூல்!
-
திலகம் பதிப்பகம், 17இ, பி-1 கே.கே.பொன்னுரங்கம் சாலை, ஓம்சக்தி நகர், வளசரவாக்கம், சென்னை-87. (பக்கம்:191. விலை:ரூ.85) பழந்தமிழ் சொற்கள் பண்டு தொட்டுத் திரிந்து, வளர்ச்சிப் பெற்று மருவி வழங்கும் நிலைகள் சிறப்பாக இதில் தெளிவாக்கப் பட்டுள்ளன. தமிழ்மொழி இலக்கண ஆய்வாளர்களுக்கு இப்புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் பயன் உள்ளதாக அமையும்.
-
பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை- 600 108 போன்: 044 2527 0795; 3253 0516; 2523 4576; மின் அஞ்சல்: paarinilayam@yahoo.co.in
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
-
வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை - 600 108. தொ.எண்: 25270795, 32530516.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்