முகப்பு » பொது » விசைத்தறி

விசைத்தறி விபரீதங்கள் கேட்க நாதியில்லை

ஆசிரியர் : ஆ.கிருஷ்ணமூர்த்தி

வெளியீடு: கடமை இயக்கம்

பகுதி: பொது

Rating

பிடித்தவை
கடமை இயக்கம், 31 அகம்படியார் மகால், அருப்புக்கோட்டை 626 101, விருதுநகர் மாவட்டம். பக்கம்: 82

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகரில், உரிய அனுமதி இல்லாமல் சுலபமாக கிடைக்கும் மின் இணைப்பை வைத்து,
இரைச்சலுடன் ஓடும் விசைத்தறிகள், வீடுகளில் வசிப்பவர்களின் தூக்கம், படிப்பு என்று எல்லாவற்றையும் கெடுத்து உடல் மற்றும் மனதை பாதித்து நோயாளிகளாக மாற்றிக் கொண்டிருப்பதை புள்ளிவிவரங்களுடன் நூலாசிரியர் விவரித்துள்ளார்.
சட்டவிரோதமாக தொழில்நடத்தும் விசைத்தறி உரிமையாளர்கள் மீது புகார் தெரிவிப்போரை வேறு இடத்துக்கு அவர்கள் குடிபோகச் சொல்கின்றனர். நகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்த போதும், கண்டு கொள்ளாத போக்கு தொடர்கிறது என்று நூலாசிரியர் ஆதங்கப்பட்டுள்ளார்.
இப்பிரச்னை தொடர்பான வழக்குகள், புகார்கள், ஒலிமாசு புள்ளிவிவரங்கள், உடல்நலப்பிரச்னைகளை இப்புத்தகம் தெளிவாக முன்வைக்கிறது. ஒரு சமூக நோயின் மூல காரணத்தை வேரோடு சாய்க்க முயற்சி செய்யும் நூல் இது.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us