மண்ணுலகில் வாழ்ந்த மிகக் குறுகிய காலத்தில் மக்களின் மனப் புண்களை ஆற்றியவர். மருந்தாகச் செயல்படும் அத்வைத தத்துவத்தை ஸ்தாபித்தவர். "என்றும் இருப்பது ஒரே வஸ்து. மற்றதெல்லாம் அழியும்போதுகூட, அது அழியாமல் இருக்கும். அதுவே பிரம்மம், அதுவே சத்தியம், அதுவே ஆனந்தம்' என்றார். நமது பாரத தேசத்தின் வரலாறு, பண்பாடு, கலாசாரம் எல்லாவற்றுக்குள்ளும், ஆதிசங்கரர் சுடரொளி வீசிக் கொண்டிருக்கிறார்.