குழந்தை பிறக்கும் நேரத்தை வைத்துத்தான் அதன் ஜாதகம் கணிக்கப்படுகிறது. அந்த நேரத்தை, சிலர் குழந்தையின் தலை வெளியே தெரியும் நேரம் எதுவோ அதுவே என்றும், குழந்தை பூமியைத் தொட்ட நேரம் எதுவோ அது என்றும் பலவாறு சொல்வர். ஆனால், தாய்க்கும் சேய்க்கும் இடையே உள்ள தொப்புள் கொடி துண்டிக்கப்படும் நேரம் எதுவோ அதுவே குழந்தை பிறந்த நேரம்.
அதற்குத்தான் ஜாதகம் கணிக்க வேண்டும் என்று விளக்குகிறார் ஆசிரியர். இவை போன்ற பல பயனுள்ள குறிப்புகளுடன் முகூர்த்த சிந்தாமணி காலபிரகாசிகா, மனையடி சாஸ்திரம் போன்ற பல நூல்களில் காணப்படும் பல விஷயங்களின் அடிப்படையில் இந்த நூல் எழுதியிருக்கிறார் ஆசிரியர். - சிவா.