முகப்பு » இலக்கியம் » சங்க கால வானிலை

சங்க கால வானிலை

விலைரூ.300

ஆசிரியர் : கு.வை.பாலசுப்பிரமணியன்

வெளியீடு: முக்கடல்

பகுதி: இலக்கியம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வானிலைக்கும், காலநிலைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கத் துவங்கி, சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்தும் வானிலைச் சிந்தனைகளை ஆய்வு நோக்குடன் வெளிப்படுத்தியுள்ள நுால். காற்று வீசுதல் குறித்தும், மழை பொழிவது குறித்தும், 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் கொண்டிருந்த கருத்தை, இலக்கியச் சான்றுகளுடன் எடுத்துரைக்கிறது.
புகை மேகம், பஞ்சு மேகம், யானை மேகம் என்று உருவெளித் தோற்றத்தை வைத்து மேகத்தை அடையாளப்படுத்தியது அறிவியல் நுட்பத்துடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆறு காலங்களாக, ஓர் ஆண்டு பிரிக்கப்பட்டுள்ள தன்மை, மாறாமல் இருப்பதை, வானிலை பற்றி அந்தக் காலத்திலேயே இருந்த சிந்தனையை அறிய இயலும்.
வானிலை ஆய்வு நிலையத்தில் பணியாற்றிய ஒருவர், தமிழ் இலக்கிய ஆர்வம் காரணமாக ஆய்வு செய்து உருவாக்கியது. தமிழ் இலக்கியங்கள், வரலாற்றுக் களஞ்சியமாக மட்டும் விளங்காமல், அறிவியல் களஞ்சியமாகவும் விளங்குகின்றன என்பதற்கு எடுத்துக்காட்டு.
முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us