முகப்பு » ஆன்மிகம் » வானமழை நீ எனக்கு

வானமழை நீ எனக்கு

விலைரூ.230

ஆசிரியர் : வரலொட்டி ரெங்கசாமி

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா... நின்னை தீண்டுமின்பம் தோன்றுதடா நந்தலாலா... என்பது போல, காணும் அழகெல்லாம் பச்சை புடவைக்காரியின் அழகாய் எழத்தாளருக்கு தோன்றுகிறது.
பெண்ணின் அழகில் மயங்குவது மனித இயல்பு. அதை, ஆன்மிக இயல்பாய் மாற்றும் பக்குவம் தெரிந்திருக்கிறது. அழகென்பது ஆளை கவர்ந்திழுக்கும் சிறு அடையாளம் தான். அதைத்தாண்டிய திறமையை பார்க்கும் போது, அழகு மறைந்துவிடும். ஆராதிக்க தோன்றும்.
ரஞ்சனியின் கண்களை பார்த்து, கன்னக்குழிகளை ரசிக்க நினைத்த எழுத்தாளர், தன்னை தொட்டு ஆசிர்வதிக்க வேண்டும் என நினைத்தது, சுமாரான மால்யாவிடம் தான். ஒருவரின் திறமை தான், நிரந்தர முகவரி என்பதை மால்யாவுக்கு உணர்த்துவது போல, நமக்கும் உணர்த்துகிறார்.
எவ்வளவு பெரிய எழுத்தாளரையும் நிற்க வைத்து, எழுத்தை கூர் கூராக ஆராய்ந்து விவாதம் செய்யும் போது வியர்த்து விடும். இங்கும் அப்படித்தான். ரஞ்சனியின் பெயரில் அன்னை பராசக்தி அவரை தட்டி எழுப்பி, பொன்னென வார்த்தைகளை எழுதத் தூண்டி ஜொலிக்க வைக்கிறார்.
சட்டென பார்க்கத் தூண்டும் அழகைப் போன்ற அடையாளம் தான், இயல்பான ஆடிட்டர் ஸ்ரீதரிடம் இருந்தது. இதயத்தை புரட்டி எழுத்துக்களை வார்த்து எடுத்து, படிக்க கொடுப்பது, கடுமையாக உழைத்து முன்னுக்கு வந்த வரலொட்டி ரெங்கசாமியின் அடையாளம். அதனால், உருவாகிய வாசகர்கள் வட்டமே, அவரை மேலும் புடம் போட்டு எழுத்துக்களால் மின்ன வைக்கிறது.
காட்டாற்று வெள்ளம், கண்ணீரில் கண்டதை எல்லாம் அடித்து புரட்டி, களைத்து சோர்ந்து கடலில் நிதானமாக கலப்பது போல கதையோட்டம் அமைந்துள்ளது. அழகில் மயங்கி அறிவில் திளைத்து, ஆன்மாவில் ஒன்றும் இரு .ள்ளங்களின் உணர்வுகளை பற்றிய கதை. படைத்தவரைப் போலவே படிப்பவரக்கும் மனம் கனக்கும்.
எம்.எம்.ஜெ.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us