முகப்பு » பொது » பாரதியின் மரண சாஸனம்

பாரதியின் மரண சாஸனம்

விலைரூ.100

ஆசிரியர் : நெல்லை கிருஷ்ணன்

வெளியீடு: இராஜமரகதம் பதிப்பகம்

பகுதி: பொது

ISBN எண்:

Rating

பிடித்தவை
பாரதியின் புரட்சிக் கருத்துக்கள், மக்கள் மனதில் முக்கியத்துவம் பெற்றுள்ளதை பறைசாற்றும் நுால். சித்தர்கள், அவதார மூர்த்திகள் எல்லாரும் மாண்டு போயினர். சாக மாட்டேன் என சபதம் செய்தவனும் செத்துப் போனான். அச்சத்தையும், சினத்தையும் வென்றவருக்கு சாவு இல்லை என சொன்ன பாரதி இன்றும் வாழ்கிறார் என்பதை அழகாக பதிவு செய்துள்ளது.

பிறப்பும், இறப்பும் இயற்கையின் நிகழ்வு. அதை மாற்ற இயலாது. வந்தவர்கள் எல்லாம் போய்த் தான் ஆக வேண்டும். அடம் பிடிக்கும் ஆற்றல் மனித உயிருக்கு இல்லை. ஆனால், புரட்சிக் கருத்துக்களை பேசிய பாரதி புகழ் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறது என்பதை முன்னிறுத்துகிறது. பாரதியின் ஆளுமையை முழுமையாகப் பதிவு செய்துள்ள நுால்.
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us