முகப்பு » வாழ்க்கை வரலாறு » நாதமெனும் கோவிலிலே

நாதமெனும் கோவிலிலே

விலைரூ.100

ஆசிரியர் : ஸ்ரீவித்யா தேசிகன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
இசை உலகில் 50 ஆண்டுகளாக கொடி கட்டிப் பறப்பவர் வாணி ஜெயராம். ‘பழநி முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்ததால, வளர வளர தேன் மாதிரி குரல் இருக்கப் போறது... சங்கீதத்தில் சாதனை பண்ணும் இந்த குழந்தை’ என கணிக்கப்பட்டவர்.

சிறு வயதிலே கர்நாடக சங்கீதம், மெல்லிசையில் இசைப் பயணத்தை ஆரம்பித்தவர். இவர் முதலில் கால் பதித்தது, ஹிந்தி மற்றும் ஹிந்துஸ்தானியில் தான். தமிழில், ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்...’ என்ற பாடல் வாயிலாக பிரபலமாகி தேசிய விருது பெற்றார்.

தொடர்ந்து இரண்டு தேசிய விருதுகளையும், தமிழக அரசின் எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதையும் பெற்றார். கர்நாடக சங்கீதம், திரை இசை, ஹிந்துஸ்தானி சங்கீதம் என மூன்று தளங்களில் பயணித்த ஒரே பாடகி. இசை மட்டுமல்லாமல் ஓவியம், கவிதை என இதர கலைகளிலும் பங்காற்றியவர். இவரைப் பற்றி சுவாரசியமான தகவல்களைக் கொண்ட புத்தகம்.
– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us