முகப்பு » ஆன்மிகம் » வாழ்வில் வளம்பெற தமிழ் மந்திர அர்ச்சனை பூக்கள்

வாழ்வில் வளம்பெற தமிழ் மந்திர அர்ச்சனை பூக்கள்

விலைரூ.110

ஆசிரியர் : ஆர்.உமா மகேஸ்வரி

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
போற்றி வழிபட்டால் தடைகள் அகலும். நினைத்தது நிறைவேறும். தீவினைகள் அகன்று வெற்றி கிடைக்கும் என வழிகாட்டும் நுால். போற்றி வழிபாடு செய்வதால் வெற்றி கிடைக்கும். துன்பம் நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் பெற்று செல்வச் செழிப்புடன் வாழ முடியும். கல்வியில் தேர்ச்சி பெற 108 சரஸ்வதி போற்றி ஜபிக்க வேண்டும். வெற்றி பெற மாருதியைப் போற்ற வேண்டும். நினைத்தது நிறைவேற சந்தோஷி மாதாவை 108 போற்றிகளால் வழிபட வேண்டும்.

அந்தந்த தெய்வங்களுக்கு உரிய 108 போற்றிகளையும் அகர வரிசைப்படுத்தி தரப்பட்டு உள்ளது. அர்ச்சனைகள் தமிழில் உள்ளதால் எளிதில் பொருள் விளங்குகிறது. சரஸ்வதியைப் பற்றி 108 போற்றிகள் தந்ததோடு, குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையை பின் இணைப்பாகத் தந்துள்ளது தனிச் சிறப்பு. தமிழில் அர்ச்சனை செய்து வழிபடும் ஆன்மிக அன்பர்களுக்கு பெரிதும் உதவும் நுால்.

– புலவர் இரா.நாராயணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us