முகப்பு » ஆன்மிகம் » பரசிவ முக்தி கீதை

பரசிவ முக்தி கீதை

விலைரூ.750

ஆசிரியர் : தவத்திரு சுவாமி ஓங்காரநந்தா

வெளியீடு: ஓங்காரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பிரணவ குமாரி என்ற துறவி லட்சுமிபாயின் தவ வாழ்வை விவரிக்கும் நுால். இசை ஆசிரியையாக வாழ்வை துவங்கி, சச்சிதானந்த சுவாமிகளை குருவாக ஏற்றுக் கொண்டவர். கங்காதர சுவாமிகள், ஞான தீட்சை கொடுத்து, பிரணவ குமாரி என்ற திருநாமத்தையும் வழங்கினார்.

ஆவுடையார் கோவிலில் ஆத்மநாதர் சன்னிதியில் சுவாமி ஓங்கார நந்தாவிடம் ரகசிய சிவ பஞ்சாட்சர தீட்சை பெற்றவர். ஓங்கார ஆசிரமத்தின் தலைமை பொறுப்பில் கண்ணும் கருத்துமாக கவனித்தவர்.

அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி நாடுகளுக்கு ஞான யாத்திரை மேற்கொண்டு ஆத்ம சாதனை வழங்கியுள்ளார். எதிர்கால நிகழ்வுகளை கணித்துக் கூறும் திறனும், சூக்கும உருவத்தைப் பார்க்கும் ஆற்றலும் உடையவர். அவரது அருள் சக்தி சிறந்தது எனக் குறிப்பிட்டுள்ளது.
துவக்கத்தில் ரிபு கீதை கூறும் ஜீவன் முக்தியும், ஸ்ரீ வித்யாருண்ய சுவாமிகள் அருளிய ஜீவன் முக்தி விவேகாவும், புண்ணாக்கு சித்தர் பற்றிய குறிப்பும், பாடல்களும் இடம் பெற்றுள்ளன; ஆன்மிக அன்பர்கள் விரும்பும் நுால்.

  – புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us