தமிழ் மொழியில், 96 வகைச் சிற்றிலக்கியங்கள் உள்ளன. சங்க இலக்கியங்களில் நண்டு, நாரை, வண்டு, கிளி போன்றவை துாது சென்றதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியங்களுக்கு, நாயக்க மன்னர்கள் ஆதரவு அளிக்காததால், துாது இலக்கியங்களை புலவர்கள் இயற்றியதாக கூறப்படுகிறது. தேவதாசியரின் குடும்ப நிலை, பழக்கவழக்கங்கள், குலதெய்வ வழிபாடு போன்றவற்றை விறலி விடு துாதுக்களில் புலப்படுவதை நுால் விளக்குகிறது. – டாக்டர் கலியன் சம்பத்து