வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 436).
நம்மோடு இன்று வாழ்ந்து வரும் ஏழு அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகள் மிக அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன இந்த நூலில். ஒவ்வொருவரின் குணாதிசயங்களையும், ஆற்றலையும், எளிய நிலையிலிருந்து உழைப்பால் மட்டுமே முன்னேறி சமுதாயத்தின் மிகப் பெரிய நிலையை இவர்களால் எப்படி எட்ட முடிந்தது என்பதை ஏராளமான இலக்கிய மேற்கோள்களுடன் சுவையாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த பெருமக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்குப் பக்க பலமாய் திருக்குறள் மற்றும் பல அற நூல்களின் கருத்துக்கள் விளங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டி குறள் வழி நின்று வாழும் இவர்கள் வள்ளுவமாய் வாழும் வள்ளல்கள் என்று பாராட்டியிருக்கிறார். வாழ்க்கை வரலாற்றோடு ஆசிரியர் எடுத்தாளும் இலக்கிய மேற்கோள்களையும் ஒரு சேரப் படிக்கும்போது இனிய பல இலக்கிய மலர்களையும் நுகரும் இலக்கிய இன்பமும் கிட்டுகிறது.