கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 128.).
ஆதிசங்கரர் விவேகத்தை விளக்க உபநிஷத், பகவத் கீதை ஆகியவற்றிற்குப் பாஷ்யம் எழுதினார். அந்த பாஷ்யங்களைப் படிக்கும் திறமை குறைந்தவர்களுக்கும், அவகாசம் இல்லாதவர்களுக்கும் பயன்படும் வகையில் பிரகரண கிரந்தங்கள் எனப்படும் நூல்கள் இயற்றினார். அவற்றுள் அவர் முதலாவதாக எழுதியதே விவேகசூடாமணி. இனிப் பிறவியே இல்லாத நிலைக்கு வழிகாட்டும் நூல் மிக அருமையான மொழி பெயர்ப்பு. நூலில் பஜகோவிந்தத்திற்கும் விளக்க உரையால் சேர்த்துத் தந்திருக்கின்றனர்.