முகப்பு » கதைகள் » கீதைச் சிறுகதைகள்

கீதைச் சிறுகதைகள்

விலைரூ.60

ஆசிரியர் : கே.குருமூர்த்தி

வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்

பகுதி: கதைகள்

Rating

பிடித்தவை
பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 160.)

இந்நூலில் வாழ்க்கைக்குத் தேவையான அறிவுரைகள் அடங்கிய கீதையின் சாரத்தை கதைகள் மூலம் சிறு குழந்தைகளுக்கும் புரியும்படி எளிமைப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

இதில் உள்ள 18 கதைகளும், கீதை சுலோகங்களின் பொருளை உள்ளடக்கியதாக இருப்பது சிறப்பு. இக்கதைகள் வாயிலாக ஆசிரியர் அன்புடமை, ஆசையை அடக்குதல், இனியவை கூறல், உழைப்பின் பெருமை, எளிமை, கடமை உணர்ச்சி, கட்டுப்பாடு, கர்வமின்மை, தாழ்வு மனப்பான்மை அகற்றல், தெய்வ நம்பிக்கை, நல்லோர் நட்பு, நேர்மை, மனிதநேயம் போன்ற நல்வாழ்வுக்குரிய நற்குணங்களை வளர்க்கும் அறிவுரைகளை கீதையில் இருந்து கதைகள் மூலம் எடுத்துக் காட்டி இருக்கிறார்.

நம்முடைய பாரம்பரியம் மிக்க இதிகாச, புராண கதைகளை இக்காலத்தில் குழந்தைகளுக்கு யாரும் எடுத்துச் சொல்வது இல்லை. அக்குறையைப் போக்க இந்நூலில் ஒரு சில புராணங்களும் இடம் பெற்றுள்ளன.

பொழுதுபோக்குவதற்கு கதைகள் என்ற போதிலும், அவற்றிலும் உயரிய கருத்துக்களை நுழைத்து கதைகள் எழுதிய ஆசிரியரின் திறன் பாராட்டிற்குரியது. குழந்தைகளுக்கு வாங்கி பரிசளிக்க ஏற்ற நூல்.

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us