காவ்யா ட்ரஸ்ட் புரம், எண்.16, இரண்டாம் குறுக்குத் தெரு, கோடம்பாக்கம், சென்னை-600 024(பக்கம்:1,133)
சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களும் பம்மல் சம்பந்த முதலியாரின் நாடகங்களும் பல நாடகக் கம்பெனி
களுக்கு அன்று சோறு போட்ட நாடகங்கள் ஆகும். தமிழ் நாடக மேடைக்கு இவர்களின் பங்களிப்பு மிக உயர்ந்தது. சங்கரதாஸ் சுவாமிகள் 68 நாடகங்களை எழுதியவர். அவற்றில் இப்போது 16 நாடகங்களே கிடைத்திருக்கின்றன. வள்ளித் திருமணம், அல்லி, அரிச்சந்திரா, நல்ல தங்காள், சத்தியவான் சாவித்திரி, பவளக்கொடி, இரணியன், சீமந்தனி, சுலோசனா சதி, சதி அனுசுயா, கர்வி பார்ஸ், கோவலன், ஞான சௌந்தரி, சாரங்கதரன், அபிமன்யு சுந்திரி, லவகுசா ஆகிய இந்த 16 நாடகங்களையும் சிரத்தையுடன் தொகுத்து ஒரு மாபெரும் இலக்கியப் புதையலைத் தந்திருக்கிறார் பத்மநாபன்."ஒரு முறையான தமிழ் நாடக வடிவத்தை உருவாக்கியவர் சுவாமிகள். அவர் அமைத்துக் கொடுத்த வடிவின் பரிணாம வளர்ச்சி தான் இன்றைய நாடகங்களும் திரைப்படங்களும் என்கிறார் முனைவர் சண்முகசுந்தரம்.