புன்னகை துவங்கி, கடவுள் முடிய அறிஞர்களின் கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ள நுால். ‘உயர்ந்ததோர் லட்சியத்திற்காகப் பாடுபடுகிறோம், வாழ்கிறோம் என்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது...’ என்கிறார் அரிஸ்டாட்டில். ‘நம்பிக்கை குறையும் போது, ஒவ்வொரு மனிதனும் நெறியற்ற கொள்கையை மேற்கொள்கிறான்...’ என கணித்துள்ளார் ஜான் மில்டன். இப்படி எளிய கருத்துக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. – பின்னலுாரான்