விலைரூ.150
புத்தகங்கள்
பக்கம்: 240
மானிடர் வாழ்வில் சிறந்த நண்பன் நூல்களே என்று பெரியோர் கூறுவர். ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தில், அவர் முன்னேற வழிகாட்டுவது பெற்றோர், ஆசிரியர்கள், மட்டுமன்று; நல்ல நூல்களே என்று துணிந்து கூறலாம். இந்நூல் அந்தவகையில் இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும் பயனுள்ள நூல் ஆகும்.
நூலாசிரியர், வெறும் உபதேசங்களை மட்டும் கூறாமல், தக்க எடுத்துக் காட்டுகளையும் தந்து நூலை எழுதிச் செல்வது, நூலை அயர்வின்றிப் படிக்க உதவுகிறது.
உடலினை உறுதி செய்யவும், மனநலம் நன்கு அமையவும், பண்பு நலம் வளரவும், இக்கருத்துக்களை இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு உதவும்."அச்சம்தவிர் என்ற தலைப்பில், ஆசிரியர் எழுதியுள்ள செய்திகள் படிப்போர்க்கு மிகவும் உதவும் (பக்: 113), மொழி பெயர்ப்பு நூல் என்ற சுவடே தெரியாமல் மூல நூல் போன்றே அமைந்துள்ளது பாராட்டத்தக்கதாகும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய