பலரும் கோவிலுக்குச் செல்கிறோம். அங்கு என்ன புதுமை என அறிய ஆர்வம் காட்டுவதில்லை. இதைக் கூர்ந்து கவனித்து தெளிவாக எழுதப்பட்டுள்ள நுால்.
‘பத்திரமாக வீடு திரும்ப வேண்டும்’ என்று வேண்டுவோருக்கு காவலாக இருக்கிறார், திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவிலில் அருள்பாலிக்கும் பிள்ளைத்திருநறையூர் அரையர். ஏழு மலை, ஏழு கோட்டை, ஏழு மகா துவாரங்கள், ஏழு அடி உயர பெருமாள் என அமைந்திருக்கும் வரதராஜ பெருமாள் கோவில், கிருஷ்ணகிரி, சூளகிரியில் உள்ளது.
பாபநாசம் கோவில் உலகம்மன் சன்னிதி முன் நடக்கும் திருமணங்களில், அம்பாளே மணமகளுக்கு நாத்தனாராக இருந்து நடத்தி வைப்பதாக ஐதீகம்.
–- இளங்கோவன்