முகப்பு » கட்டுரைகள் » கம்பரிடம் யான் கற்ற அரசியல்

கம்பரிடம் யான் கற்ற அரசியல்

விலைரூ.85

ஆசிரியர் : ம.பொ. சிவஞானம்

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

Rating

பிடித்தவை

பக்கம்: 224   

சிலம்புச் செல்வரின் 17வது நினைவுநாள் வெளீயீடாக இந்த நூல் மலர்ந்திருக்கிறது. சிலம்பிலும், கம்பனிலும், அய்யா ஆழங்கண்டு முத்தெடுத்த மூதறிஞர், முப்பெருங்கவிஞர்களின் பாராட்டு என துவங்கி, தத்துவ மேதை கம்பர் என, 19அத்தியாயங்களோடு புத்தகம்நிறைவடைகிறது.வான்மீகியில் உள்ள உத்தரகாண்டம் கம்பரால் பாடாதது ஏன்? என்ற வினாவை முன் வைத்து, தீண்டாத் திருமேனி சீதாப்பிராட்டியின் கற்பினை விளக்கி, ஆய்வு செய்து, சிலம்பையும், கம்பனையும் ஒப்பிடுவது (பக்25-29) மிகமிக அருமை.கம்பனில் அதிகமாக விவாதிக்கப்படுகின்ற, வாலி வதைப் படலம் பற்றி மிக நுணுக்கமாய் ஆய்வு செய்து, வாலி வதைப் படலம் என்பதைவிட, வாலி மோட்சப் படலம் என்பதே பொருந்தும் என, (பக் 109-116) ஓர் அற்புதமான புதிய நோக்கோடு ஆய்ந்துள்ள புலமை, வியக்க வைக்கிறது.

அதிகார அரசியலுக்கு, தன்னை அடிமைப்படுத்திக் கொள்ளாதது கம்பராமாயணம் படித்துணர்ந்ததன் விளைவுதான் என, அரசியல் நோக்கில் கம்பனை விமர்சிப்பது, பக்கம் 117-140 ஒவ்வோர் கம்பன் சுவைஞர்களும், படித்துணர வேண்டிய செய்தி. வாங்கிப் படித்து மகிழ வேண்டிய கம்பனின் தேனமுதம்.

 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us