ஸ்ரீவைஷ்ணவம் எனும் விசிஷ்டாத்வைதம், ராமானுஜரால் புத்துயிர் அளிக்கப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து நிலை பெற்றுள்ளது. அதற்கு அடிப்படையாக இருந்த, கைங்கர்யத்தில் ஊன்றிய ஸ்ரீவைஷ்ணவ தாசர்கள், 50 பேரின் பெருமைகளைக் கூறுகிறது இந்த நூல். கர்மயோகிகளுக்கும், கைங்கர்ய நிஷ்டர்களுக்கும் உள்ள வேறுபாடுகளைக் கூறுவதும் (பக்.3), ‘ஏறுதிருவுடையான்’ என்ற ஆண்டாள் பாசுரத்தின் சொல்லிற்கு, சரியான பொருள் விளக்குவதும் (பக். 30), தாழ்த்தப்பட்டவரான மாறநேர் நம்பியின் உயர்குணங்களை விளக்குவதும் (பக். 69 – 86), சொட்டைநம்பி குறித்த செய்தியில், ‘தன் தனக்கு’ என்ற திருவாய்மொழி (4-5-7) சொற்றொடருக்கு விளக்கம் கூறுவதும் (பக். 135), நூலாசிரியரின் ஆழ்ந்த புலமையை காட்டுகின்றன. அடியார்களின் பெருமை கூறும் இந்நூலை படித்தால், ஸ்ரீவைஷ்ணவத்தில் மேடு பள்ளம் இல்லை என்ற உணர்வை பெற முடியும்.
- டாக்டர் கலியன் சம்பத்து