பழைய காலத்தில் நியாய பஞ்சாயத்துகளில் கீழ்மட்ட அளவில் வழங்கிய நல்ல தீர்ப்புகளை தரும் நுால். நகைச்சுவை கலந்து உண்மைகளை கண்டறிந்து மரியாதை ராமன் வழங்கியவை இதில் உள்ளன. சில பஞ்சதந்திரக் கதைகள் போல் உள்ளன.
ரத்தினக்கல் பற்றி தெரியாதவரை, சாட்சிக்கு கூட்டி வந்தவனை நீதிபதி அம்பலப்படுத்துவது சிறப்பு. இப்படி கூர்மதி உள்ளவர்களை இன்றும் பார்க்கிறோம். யானைக்குப் பானை சரியாய் போச்சு என்பது வேடிக்கை கதை மட்டுமல்ல, விவேகமுள்ளது. புத்திக் கூர்மையை வளர்க்கும் நுால்.
– சீத்தலைச் சாத்தன்