ஆடல் கலையின் தோற்றம், வளர்ச்சி, கலைநுட்பங்களை விரிவாக வெளிப்படுத்தும் நுால். கலை வடிவங்கள் ஆன்மிகத்தோடு இணைத்து வரைவுப்படங்களோடு எடுத்துக் காட்டப்பட்டு உள்ளன.
நாட்டியக் கலைகள் மட்டுமன்றி சிற்பக் கலை, கோவில் அமைத்தல், கப்பல் கட்டுதல், கோட்டை எழுப்பும் கலை சிறப்புற்றிருந்ததை எடுத்துரைக்கிறது.
தொன்மை ஆடல்களான கும்மியாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டத்தில் ஆட்ட வேறுபாடுகள் விளக்கப்பட்டுள்ளன. கலை, பொது அறிவு நோக்கில் படிக்க வேண்டிய நாட்டிய கருவூலம்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு