முகப்பு » கதைகள் » காத்திருக்கிறாள் கரும்பு

காத்திருக்கிறாள் கரும்பு

விலைரூ.200

ஆசிரியர் : பா.முத்துக்குமரன்

வெளியீடு: கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகளின் சாரத்தை, கருவாக அமைத்து எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். பல்வேறு காலக்கட்டத்தில் தினமலர் – வாரமலர் மற்றும் இணைப்பு இதழ்களில் எழுதியவை தொகுத்து உருவாக்கப்பட்டுள்ளது.

அன்றாடம் காணும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து கூர்மையான பார்வையால் அலசி, மேலான சிந்தனையுடன் புனையப்பட்டுள்ளன. மகாகவி பாரதி, திருமூலர், வள்ளலார் பாடல்களை, கதையில் பொருத்தமான பகுதிகளில் இடம் பெறச் செய்துள்ளது சிறப்பு சேர்க்கிறது.

ஊருத்தாயி, கெங்கிலிக்கா, ஓலைக்காற்றாடி, கிளிக்கூண்டு, வள்ளித்திருமணம், காத்திருக்கிறாள் கரும்பு போன்ற தலைப்பில் அமைந்த கதைகள் வியப்பை தருகின்றன. ‘நம்பிக்கையில் தான் உலக சக்கரமே சுத்திக்கிட்டு இருக்கு’ போன்ற கருத்துகள், வாசிப்புக்கு உற்சாகம் தருகின்றன. மனதுக்கு புத்துணர்வு தரும் வகையில் படைக்கப்பட்டுள்ள சிறுகதை நுால்.
பாவெல்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us