முகப்பு » சமயம் » தமிழ்நாட்டில் ஆரம்பநிலை கிறிஸ்தவம்

தமிழ்நாட்டில் ஆரம்பநிலை கிறிஸ்தவம்

விலைரூ.300

ஆசிரியர் : டாக்டர் ஏ.ஜே.பென்சாம்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: சமயம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
 தமிழகத்தில் கிறிஸ்தவம் பரவியது பற்றியும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆவணங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். கி.பி., 1706 முதல் 1841 வரை உள்ள காலக்கட்ட வரலாற்றை விவரிக்கிறது.

புத்தகத்தின் முதலில் பரந்த தகவல்கள் சுருக்கித் தரப்பட்டுள்ளன. தொடர்ந்து, ஒன்பது இயல்களில் செய்திகளை சொல்கிறது. ஆரம்பகால செயல்பாட்டை விளக்குகிறது.

தொடர்ந்து தரங்கம்பாடி நடவடிக்கைகளை கூறுகிறது. தமிழகத்தின் வடபகுதியில் இருந்த அமைப்புகள் பற்றி விரித்துரைக்கிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளுக்கு கிறிஸ்தவம் பரவியது குறித்தும் உள்ளது. கிறிஸ்தவ மதம் தமிழகத்தில் எப்படி பரவியது என்பதை ஆய்வுப்பூர்வமாக விளக்கும் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us