ஸ்ரீ அரவிந்தர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், நினைவுக் குறிப்புகளை பதிவு செய்துள்ள நுால்.
அரவிந்தரின் பள்ளிப்பருவம், ஆசிரியராகப் பணி புரிந்தபோது கற்பித்த விதம், சுதந்திரப் போராட்டப் புரட்சிக்கு தனியாகப் பொறுப்பேற்றுக் கொண்டமை, குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருந்தபோது காட்டிய அமைதி போன்ற விபரங்கள் பதிவாகியுள்ளன.
எப்போதும் எளிமையான தோற்றம், இளைஞர்களிடம் பழகிய விதம், எவரிடமும் வன்மமோ, கோபமோ இல்லாத தன்மை, யோகப்பாதையில் முன்னேற குள்ளச்சாமி காட்டிய வழி, ஆவியை விரட்டிய சித்து விளையாட்டு போன்ற விபரங்கள் சொல்லப்பட்டுள்ளன.
– இளங்கோவன்