இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் நோக்கிலான திறனாய்வு நுால். மொத்தம், 14 எழுத்தாளர்களின் கதைகள் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன.
பர்வீன் பானு எழுதிய சிறுகதை, ரமலான் நோன்பு நாளில் எல்லாருக்கும் உணவு அளிக்க வேண்டும் என்ற கருத்தை, அல்லாவின் உத்தரவு என்று குறிப்பிட்டு, ஹிந்து பெண்ணிற்கு உணவு வழங்கியதை சிறப்பித்துள்ளது.
விஜி முருகநாதன் எழுதிய, ‘செல்லா’ கதை, வெட்டியான் பற்றியது. பிணம் எரிக்கும் தொழில் இழிவானது என்று கருதுவோரை சிந்திக்கத் துாண்டும். சிறுகதை எத்தகைய கருவைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும்; எவ்வாறு திறனாய்வு செய்ய வேண்டும் என விளக்குகிறது. சிறுகதை எழுத முயல்வோருக்கு வழி காட்டும் நுால்.
– முனைவர் ரா.நாராயணன்