முகப்பு » கதைகள் » குழந்தைகளுக்காக...

குழந்தைகளுக்காக...

விலைரூ.175

ஆசிரியர் : நன்னன் குடி

வெளியீடு: ஏகம் பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். தமிழை புறந்தள்ளக்கூடாது என அழுத்தமாக பிரதிபலிக்கின்றன.

பிறரை துன்புறுத்தவோ, வருத்தவோ கூடாது என, ‘தண்டனை’ கதை, மாணவர்கள், ஆசிரியர்கள் பொறுப்புணர்வை கூறுகிறது. சிறுவர் – சிறுமியரிடம், பெரியவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என, ‘கூர்நோக்கு’ அக்கறையுடன் பகிர்கிறது.

ஒரு மாணவி, காக்கையிடம் வைத்துள்ள நேசத்தை கண்முன் கொண்டு நிறுத்தி, காக்கையின் இயல்பான சிறப்பை கூறுகிறது, ‘காக்கைச் சிறகினிலே’ கதை.

எவ்வளவு சுயநலமாக இருந்தாலும், பொது நலனுக்கு சமூகத்தில் தனி இடம் உண்டு என்பதை ஒவ்வொரு கதையும் வலியுறுத்துகின்றன. சமூக அக்கறையுள்ள கதைகளின் தொகுப்பு நுால்.

– டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us