இந்திய விடுதலைக்கு முந்தைய, பிந்தைய வாழ்க்கையை சித்தரிக்கும் கதைகளின் தொகுப்பு நுால். கூர்ந்து கவனித்து எழுதப்பட்டுள்ளது.
காதல், கல்யாணத்தில் ஏற்படும் பிரச்னைகள் மாறுபட்ட நிலையில் அமைந்துள்ளன. கதாபாத்திரங்கள் குடும்பப் பின்னணியுடன் செதுக்கப்பட்டுள்ளன. கல்யாணத்திற்குப் பின் காதல் அதே தன்மையில் தொடர்வதில்லை என்கிறது. எளிய மொழிநடையில் உள்ளது. பெண் படைப்பில் குறிப்பிட்டு சொல்லத்தகுந்தது. சிறந்த அனுபவம் கொடுக்கும் நுால்.