நெல்சன் சேம்பர்ஸ் பிளாக், 39ஏ, மாடி எண்.6, 115, நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-29, போன்: 2474 3380. (பக்கங்கள்: 114)
ஆழ்வார்களின் பாடல்கள் பெற்ற வடநாட்டு திவ்ய கே்ஷத்ரங்கள்-9. அவையாவன: அயோத்யா, நைமிசாரண்யம், மதுரா, கோகுலம், பத்ரி, பிரிதி (ஜோதிர்மட்), ஷ்ரீகண்ட கே்ஷத்ரம், துவாரகா, சாலிக்கிராமம் முதலியன. அந்த திருத்தலங்களுக்கு தீர்த்தயாத்திரை புனிதப் பயணம் மேற்கொண்டு தரிசன அனுபவங்களை பக்தி ததும்ப கட்டுரையாக்கித் தந்துள்ளார். படிக்கும் நாமும் ஆசிரியருடன் அந்த ஸ்தலங்களுக்கே உடன் சென்று தரிசித்த உணர்வைப் பெறுகிறோம் என்பதே இந்நூலின் சிறப்பு.
நவ திருப்பதிகள் பயணம் மேற்கொள்வோர் இந்நூலையும் கையில் எடுத்துச் செல்வது பயன் தரும்.