முகப்பு » வரலாறு » தென்னகத்தின் ஹரப்பா (கீழடி – வரலாறு)

தென்னகத்தின் ஹரப்பா (கீழடி – வரலாறு)

விலைரூ.60

ஆசிரியர் : முனைவர் சு.தினகரன்

வெளியீடு: தமிழ்நாடு அறிவியல் இயக்கம்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
மனித இன வளர்ச்சி, ‘பல்’ துறைகளில் இருந்தாலும், ‘பல்’ பரிணாம வளர்ச்சியில் இருந்து, மனித வளர்ச்சியை ஆராய்கிறார் நுாலாசிரியர். விலங்குகளில், குரங்குகளிடமிருந்து, ‘பல்’ அமைப்பு மனிதருக்கு வந்துள்ளதா? 25 ஆயிரம் ஆண்டுகளாக தாடையில் பற்கள் காலத் தேவைக்கு ஏற்ப மாற்றம் பெற்று நிற்கின்றன. உணவு முறையே இதற்குக் காரணம் என்று, ‘பல்லும் பரிணாமமும்’ முதல் கட்டுரை கூறுகிறது.
இந்தியாவில், 7.8 கோடி மக்களுக்கு வீடு இல்லை. ‘சராசரி இந்தியன், உணவு, கல்வி மற்றும் மருத்துவச் செலவிற்காக, தன் ஊழியத்தில் பெரும் பகுதியை இழப்பதாக புள்ளி விபரம் சொல்கிறது (பக்., 14).
முயலுக்கு நுகரும் செல்கள், ஆயிரம் லட்சம் எனில், நாய்களுக்கு அப்படியே இரு மடங்கு! நம் மூதாதையர்களான நியாண்டர்தால் மனிதர்கள் முகரும் திறன் அதிகம் பெற்றவர்கள் போன்ற அறிவியல் செய்திகளை அள்ளி வீசுகிறது இந்த அழகிய நுால். தென்னகத்தின் ஹரப்பா எனறு போற்றப்படும், ‘கீழடி’ மதுரை வைகை ஆற்றுப் படுகையின் அகழ்வு ஆய்வு, பல வரலாற்றுச் செய்திகளை வழங்குகிறது.
‘கெழவி’ என்ற தலைப்பில் வந்துள்ள தலைப்பு (பக்., 49) கிழவி என்று இருக்க வேண்டும். அறிவியல் ஆய்வு நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us