நக்கீரன் பத்திரிகை பதிப்பித்த அரசியல் குற்ற சம்பவங்கள், ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்களை தொகுத்து தரும் நுால்.
புலனாய்வு செய்து குற்றங்கள் பற்றி செய்தி வெளியிட்டமைக்காக வழக்குகளை எதிர்கொண்டதை எடுத்துரைக்கிறது. செய்திகளின் பின்விளைவாக வந்த தாக்குதல்கள் விறுவிறுப்பாக சொல்லப்பட்டுள்ளன. ஊழலில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி புலனாய்வு செய்து வெளியிட்டதை விவரிக்கிறது.
ஜெயலலிதாவிடம் கையகப்படுத்திய சொத்தின் விரிவான பட்டியல், வழக்கு தொடர்பாக அறிய வைக்கிறது. எம்.ஜி.ஆர்., – ஜெயலலிதா இடையில் திரைப்படத் துறையில் ஏற்பட்ட முரண்கள் என பலவற்றையும் அறிய தருகிறது. தமிழக அரசியல் நிகழ்வுகளின் பின்னணியில் அமைந்த நுால்.
– மெய்ஞானி பிரபாகரபாபு