ஆன்மிக உணர்வாளர்களுக்கும், யோக நெறி பயில்வோருக்கும் அற்புத வழிகாட்டியாக விளங்கும் நுால். யோக நெறி அறிவும், அனுபவமும் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுவதை காண முடிகிறது.
உள்ளன்போடும், ஒருமித்த கருத்தோடும், நெஞ்சத்தை இறைவன் மீது நிறுத்தி செய்யும் தவயோகம் எல்லையில்லா ஆனந்தத்தை தந்து பரமாத்மா திருவடியில் இணைக்கிறது. அந்த மேன்மையான உணர்வு பற்றி விளக்கம் தருகிறது. சாதாரண மனிதனின் உடலில் இத்தனை அற்புதங்களா என வியப்பு ஏற்படுத்துகிறது.
உடலே ஆலயம் என்பதை விளக்க தரப்பட்டுள்ள ஆதாரங்களும், அனுபவ மொழிகளும், சித்தத்தை தெளிய வைக்கும் பெருமருந்தாய் உள்ளன. பிறவா பெருநிலை அடைய உதவும் யோக மார்க்கத்தை காட்டும் நுால்.
– டாக்டர் கார்முகிலோன்