பண்டிதர்கள் மட்டுமே அறிந்திருக்கும் சிவ சஹஸ்ரநாமத்துக்கு விளக்கம் தந்து விரித்துரைத்துள்ள நுால். ஈசனின் திருநாம சிறப்பை வெளிப்படுத்துகிறது.
பிரம்மனால் சொல்லப்பட்ட 10,000 நாமங்களின் சாரமே, சிவ சகஸ்ரநாமம் என தெளிவுபடுத்துகிறது. துதிகளில் சிறந்தது என்று போற்றுகிறது. ஸ்தோத்திர ராஜா என்றும் குறிப்பிடுகிறது. மூல பாடல்களுக்கு விளக்கம் மனதில் பதியும் வண்ணம் எளிய நடையில் தரப்பட்டு உள்ளது.
இறைவனை அடைய தக்க விளக்கம் கூறப்பட்டு உள்ளது. சிவன், பெருமாளுக்கு பொருந்தி வரும் திருநாமங்கள் பற்றியும் உரைக்கிறது. கருடனும் சிவ அம்சம் என குறிப்பிடுகிறது. ஆன்மிகத்தில் பாராயணம் செய்ய உகந்த பொக்கிஷம்.
– டாக்டர் கார்முகிலோன்