கொள்கையில் உடும்புப்பிடியாக இருந்து, கடுகளவும் சமரசம் செய்யாத இளைஞனை மையமாக வைத்து புனையப்பட்ட நாவல் நுால்.
காட்சிகளை கண்முன் கொண்டு வந்து காட்டுவது போல் உரையாடல்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. கல்லுாரியில் படிக்கும் இருவர், காதல் வயப்பட்டு விட்டால் எப்படி நடந்து கொள்வர் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது.
சாதாரண குடும்பங்களில் பெற்றோர் எப்படி நடந்து கொள்வர் என்பதை நயம் பட எடுத்துரைக்கிறது. சாதிக்கத் துடிக்கும் கதாநாயகன், பாதிப்புகளை சந்திப்பது திகில் காட்சியாக தரப்பட்டுள்ளது. பணமே பிரதானம் என துணிந்தால், மனம் எதைச் செய்யவும் அஞ்சாது என வெவ்வேறு கதாபாத்திரம் வழி விளக்கப்பட்டுள்ளது. திருப்பங்கள் நிறைந்த நாவல்.
– டாக்டர் கார்முகிலோன்