இந்திய சமூகத்தின் பன்முக தன்மையை ஆய்வு செய்துள்ள நுால். நீதி பரிபாலனம், ஒழுக்கம், வணிகத்துறையில் ஆய்வு செய்து தகவல்கள் தரப்பட்டுள்ளன.
சமுதாயத் தோற்றம், வளர்ச்சி, அறிவியல் மேம்பாடு, பண்பாடு, நாகரிகம், குடும்பம், திருமணம், தமிழ் சமூக கட்டமைப்பு போன்ற தலைப்புகளில் கருத்துகள் விளக்கப்பட்டுள்ளன. இந்தியாவை அலெக்சாண்டர், முகமதியர், கிழக்கிந்திய கம்பெனி அடிமை படுத்தியது பற்றி தருகிறது.
மனுதர்மம், குடும்ப முறை, எட்டு வகை திருமணங்கள் விளக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகை பெருக்கம், சமுதாய மாற்றம், சங்க கால தமிழர் நிலை, ஜாதி கட்டமைப்பு, இட ஒதுக்கீடு பற்றி ஆராய்ந்து அருமை, பெருமையை பேசும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்