காசிக்கு புனிதப் பயணம் செல்வோருக்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டி நுால்.
வரலாற்றில் காசிநகரின் முக்கியத்துவம் பற்றிய விபரங்களை தருகிறது. ராணி அகில்யாபாய் காசி விஸ்வநாதர் கோவில் அமைத்தது குறித்து விளக்குகிறது.
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழார், அருணகிரி நாதர் பாடல்களில் இந்நகரம் இடம் பெற்றுள்ளதை குறிப்பிடுகிறது. மகாகவி பாரதியாரின் கல்லுாரி படிப்பு குறித்த தகவல்களை தருகிறது. புகைப்படங்கள் அழகு சேர்க்கின்றன. காசி செல்ல ஆர்வம் ஏற்படுத்தும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து