வசிப்பிடத்தில் தொல்லை தரும் கறையான், கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி, சிலந்தி, கொசு போன்றவற்றை அகற்றும் வழிமுறைகளை தரும் நுால்.
பூச்சிகள் பெருகுவதால் ஏற்படும் பொருளாதார இழப்பும், சுகாதாரக் கேடும், உடல்நலக் குறைவும் சுட்டப்பட்டிருக்கிறது. பூச்சிகள் உருவாகும் முறை, அதற்கான சுற்றுச்சூழல், இனப்பெருக்கம், புகலிடம் பற்றி விவரிக்கப் பட்டிருக்கிறது.
பூச்சிகள் செறிவூட்டப்பட்ட நறுமணத்தை விரும்புவதில்லை. இவற்றை ஒழிக்க மஞ்சள் சேர்ந்த உப்பு, சுக்குப்பொடி, நொச்சி இலை, யூகலிப்டஸ் எண்ணெயை பயன்படுத்துவதும் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன.
பூச்சித் தொல்லையில் இருந்து விடுபட்டு ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்