விநாயகர் அருள் இருப்போர் எப்போதும் முதலிடம் பெறுவர் என, நம்பிக்கை தரும் கதை நுால். எவன் ஒருவன் தன்னை அறிந்து கொள்ளவில்லையோ, அவன் மனிதன் இல்லை என்கிறது.
ஒருவன் பிறந்த குலத்தையும் தோற்றத்தையும் கண்டு எடை போடக்கூடாது; ஞானத்தைக் கொண்டே மதிப்பிட வேண்டும்; கடவுளை நம்பினோர் கைவிடப்பட மாட்டார்; ஒழுக்கத்தோடு இருக்கும் வரை மகாலட்சுமி இருப்பார்.
இது போன்ற தத்துவங்களை சாதாரண மக்களும் புரியும் வகையில் 63 சிறுகதைகளில் எடுத்துரைக்கிறது. பெரியோர் சொன்னது, மற்றவர்களிடம் கேட்ட கதைகள் கண்முன்னே நடப்பது மாதிரி தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. அனைத்து வயதினருக்கும் உகந்த கதை தொகுப்பு நுால்.
– இளங்கோவன்