யோகி அரவிந்தர் வாழ்வில் அறியப்படாத ஆன்மிக பக்கத்தை வழங்கும் நுால்.
இலக்கியவாதி, மெத்தப்படித்தவர், சிறந்த நகைச்சுவை உணர்வு உடையவர், இரக்க குணம் கொண்டவர், 10க்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர், சுதந்திரப் போராட்ட வீரர் என பன்முகங்கள் கொண்டவர் அரவிந்தர். இவற்றில் ஒட்டாத, முற்றிலும் மாறுபட்ட தன்மையைக் கொண்டதாக விளங்குகிது அவரது யோகத் திருமுகம்.
அரவிந்தரின் ஆன்மிகத்தை விவரிப்பதோடு, அன்னைக்கு அளித்த முக்கியத்துவம், ஆஸ்ரமத்தை நடத்திய விதம் கூறப்பட்டுள்ளது. ஆன்மிக நுாலாக மட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மறைந்துள்ள பக்கங்களையும் உணர்த்துவதாக அமைந்துள்ள நுால்.
– இளங்கோவன்