புலம்பெயர்வதால் ஏற்படும் சங்கடங்கள், புது நாட்டில் துயரங்கள், உறவுகளின் அவலங்கள் போன்ற மையக்கருத்தில் எழுதப்பட்டுள்ள நாவல் நுால்.
இலங்கைத் தமிழர் பேச்சு வழக்கில் எழுதப்பட்டு உள்ளது. படித்து உள்வாங்கும் போது மையக்கருத்து பளிச்சென புலப்படுகிறது. பிறந்த மண்ணை பிரிந்த ஏக்கத்தை வெளிப்படுத்துகிறது. இளம்பருவ காதலை நளினமாக விவரிக்கிறது.
காதலை வாழவைக்கும் லண்டன் மனைவியின் நோக்கமும், போக்கும் மிகவும் அற்புதம். விவாகரத்து குறித்த வர்ணனைகள் உண்மையை எடுத்துரைக்கின்றன. ஓய்வு காலத்தில், பிறந்த மண்ணை செழிப்பாக்க வரும் பெரிய மனிதரின் மன வெளிப்பாட்டையும் கூறுகிறது. உயர்ந்த கோபுரமாக எழுந்துள்ள நாவல்.
– சீத்தலைச்சாத்தன்