நல்ல மனமே குடும்ப உயர்வுக்கு அடிப்படை என எடுத்துரைக்கும் நுால்.
வாழையடி வாழையாக, மூன்று தலைமுறையில் உதவும் பண்பு, நேர்மையால் சாதித்ததுசொல்லப்பட்டுள்ளது. நல்ல மனம் உள்ளவர் வாழ்வில் அறம், பொருள், இன்பம் நிரம்பியிருக்கும் என்கிறது. மாதா, பிதா, மனைவி, குரு, தெய்வம் என பெற்றோருக்கு அடுத்து மனைவியை போற்றுகிறது.
ஜாதி, மதம், இன வேறுபாடுகள் கடந்து, ஏழை மக்களிடம் பழகிய அனுபவப் பதிவு பிரமிக்க வைக்கிறது. நல்ல உணவு, உடற்பயிற்சி, கவலை இல்லா மனம் மூன்றும் நோயற்ற வாழ்வுக்கு தேவை என்று எடுத்துரைக்கிறது. உடல் நலமே மன நலம், மன நோயின்றி வாழ்வதே ஆரோக்கியம் என்று உரைக்கிறது. பொல்லா மனங்களை நல்ல நிலைக்கு உள்ளாக்கும் வல்லமை பெற்றுள்ள நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்