தபால் தலைகளை பயன்படுத்தி ஒருங்கிணைத்து ராமாயண கதையை புதிய கோணத்தில் காட்டும் அரிய நுால்.
ராமாயணக்கதை நிகழ்வுகள் சார்ந்து உலகம் முழுதும் வெளியாகியுள்ள தபால்தலை மற்றும் உறைகளை அறிமுகம் செய்து கவனத்தை ஈர்க்கும் வகையில் புதுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. வண்ணப்படங்களும் தபால் தலை நகல்களும் கருத்தை கவரும் வகையில் தரப்பட்டுள்ளன.
புத்தகம், ஏழு பகுதிகளாக பகுக்கப்பட்டு உள்ளது. ராமாயண கதாபாத்திரங்கள், காண்டங்கள், நிகழ்விடம் தொடர்பான வரலாற்று குறிப்புகள், ராமாயண விழாக்களை நினைவில் பதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள தபால் தலை, உறை, கார்டுகளை தொகுத்து மனதில் பதிய வைக்கிறது.
தபால் தலைகள் வழியாக ராமாயணக்கதையை காட்சியாக வடித்து காட்டும் நுால்.
– ராம்