சமஸ்கிருத மொழியில் உள்ள கூர்ம புராணத்தை எளிய தமிழ் நடையில் கூறும் நுால்.
கூர்மம் என்றால் ஆமை என பொருள். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது மந்தர மலையை நிலை நிறுத்துவதற்காக, திருமால் ஆமையாக அவதரித்ததை கூறுகிறது இந்த புராணம்.
முதல் அத்தியாயத்தில் பிராமணன் ஒருவனுக்கு திருமால் அருள் புரிந்தது சொல்லப்பட்டுள்ளது. அடுத்து பிரம்மாவின் தோற்றமும், உயிரினங்கள் படைக்கப்பட்டதும் உள்ளது. வராக அவதாரத்தின் தோற்றம் முதல் பழைய கதைகளை கூர்ம புராணம் கூறுகிறது. சிவபெருமானை பற்றிய செய்திகளும் இடம்பெற்று உள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் நிகழ்ந்தவற்றைக் கதையாகத் தெரிவிக்கும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்