பகவத் கீதைக்கு எளிய நடையில் உரை கூறும் நுால்.
கீதையின் குறிக்கோள் மோகத்தை கொல்வது; காலந்தோறும் புதிய தர்மம் வந்து கொண்டேயிருக்கும் என்கிறது. ஆன்மாவின் அழியாமை-, உடலின் இழிவு-, சுதர்மத்தின் தவிர்க்க இயலாமை- விளக்கப்பட்டுள்ளது.
கர்மயோகம், விகர்மம் பற்றி கூறுகிறது. சன்னியாசத்தை விட யோகமே சிறந்தது என்கிறது. இறக்கும் நிலையில் மேலெழும் எண்ணமே வலுவுள்ளதாகும் என்ற தத்துவம் விளக்கப்பட்டு உள்ளது.
சமர்ப்பண யோகம், விபூதி சிந்தனையை கூறி, விஸ்வரூப தரிசனத்தையும் எடுத்துக் கூறும் நுால்.
– முனைவர் கலியன் சம்பத்து